உணவுக்குப் பிறகு கர்ப்பிணி பெண்கள் நடைபயிற்சி செய்வது நல்லதா?

By Gowthami Subramani
18 Dec 2023, 12:37 IST

கர்ப்ப காலத்தில் நடைபயிற்சி செய்வது எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது. கடுமையான உணவுக்குப் பின் நடைபயிற்சி செய்வது நல்லதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்

நிபுணர் கருத்து

நிபுணர்களின் கருத்துப்படி, கடுமையான உணவுக்குப் பிறகு நடைபயிற்சி செய்வது நல்லது. அதே சமயம், உணவுக்குப் பின் மிதமான நடைபயிற்சி மேற்கொள்வது செரிமானத்தை மேம்படுத்தி உதவுகிறது

எடை மேலாண்மை

உணவுக்குப் பிறகு நடைபயிற்சி மேற்கொள்வது கர்ப்ப காலத்தில் உடல் எடை மற்றும் கொழுப்பு கூடுதல் பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும்

உடனடியாக நடக்கலாமா?

உணவுக்குப் பிறகு உடனடியாக நடைபயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். அதன் படி, குறைந்தது 30 நிமிடங்கள் அல்லது 60 நிமிடங்கள் வரை இடைவெளி விட்டு பிறகு நடைபயிற்சி செய்யலாம்

எப்படி நடப்பது?

வழக்கமான உணவுக்குப் பிறகு பெண்கள் சுமார் 15 நிமிடங்கள் வரை நடக்கலாம். இந்த வழக்கமானது கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுகிறது

தண்ணீர் உடன் நடைபயிற்சி

கர்ப்பிணி பெண்கள் நடைபயிற்சி செய்யும் போது, எப்போதும் தண்ணீர் வைத்திருப்பது அவசியம். நடைபயிற்சியின் போது ஏற்படும் உடல் வறட்சியைத் தடுத்து உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்

இடத்தை தேர்வு செய்தல்

கர்ப்பிணி பெண்கள் நடைபயிற்சி செய்ய சரியான இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் மூலம் பாதுகாப்பான நடைபயிற்சியை உறுதி செய்யலாம்

மருத்துவ ஆலோசனை

கர்ப்பிணி பெண்கள் நடைபயிற்சி வழக்கத்தை துவங்கும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதற்கு தனிநபரின் உடல் எடை மற்றும் நிலையே காரணமாகும்