மழைக்காலத்தில் ஏற்படும் சளி பிரச்னைகளை போக்க நீங்கள் செய்ய வேண்டிய வீட்டு வைத்தியங்கள் இங்கே. இதனை படித்து பயன் பெறவும்.
மஞ்சள் பால்
ஒரு கிளாஸ் சூடான பாலில் இரண்டு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கவும். இது மூக்கு அடைப்பு மற்றும் தொண்டை புண் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. மூக்கில் இருந்து தண்ணீர் வருவதை நிறுத்துகிறது.
துளசி
துளசி குளிர் காலத்தில் அமிர்தம் போன்றது. இருமல் மற்றும் சளி இருந்தால், 8 முதல் 10 இலைகளை அரைத்து தண்ணீரில் சேர்த்து கஷாயம் செய்யவும். இந்த கஷாயத்தை குடிக்கவும்.
கருமிளகு
கறுப்பு மிளகுப் பொடியை தேனுடன் சேர்த்து நக்கினால் சளித் தொல்லை குறையும். மேலும், அரை டீஸ்பூன் கருப்பு மிளகுத் தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் சர்க்கரை கலந்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலுடன் தினமும் இருமுறை குடிக்கலாம்.
கடுகு எண்ணெய்
தூங்கும் முன், இரண்டு துளிகள் பாதாம் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை இரண்டு நாசியிலும் போடவும். இதனால் எந்த விதமான மூக்கு நோயும் வராது.
இஞ்சி
சளி இருமல் இருந்தால், இஞ்சியை பாலில் கொதிக்க வைத்து குடிக்கலாம். இஞ்சிச் சாற்றில் தேன் கலந்து பருகுவதும் சளியிலிருந்து விடுபடும்.
பூண்டு
பூண்டில் காணப்படும் அல்லிசின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு போன்றவை ஆகும். இது சளி மற்றும் காய்ச்சலை நீக்குகிறது. இதற்கு 6-8 பூண்டு பற்களை நெய்யில் வறுத்து சாப்பிடவும்.