குழந்தைக்கு இப்படி தான் பால் கொடுக்கனும்

By Ishvarya Gurumurthy G
26 Mar 2024, 15:30 IST

குழந்தைகளுக்கு சரியான முறையில் பால் கொடுப்பது அவசியம். பிறந்த குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதை இங்கே காண்போம்.

பொதுவாக குழந்தையின் உடல் தாயின் உடலோடு நெருக்கமாக இருக்கும் போது, அதிகபடியான பால் சுரக்கும். மேலும் தாய்ப்பால் கொடுப்பதில் நான்கு முறைகள் உள்ளன.

பக்கவாட்டில் வைத்து பால் கொடுப்பது, தொட்டில் நிலையில் பால் கொடுப்பது, குழந்தையை கையில் ஏந்தி பால் கொடுக்கும் நிலை மற்றும் இடைப்பட்ட நிலை என பிரிக்கப்படுகிறது.

குழந்தையை கையில் ஏந்தி பால் கொடுக்கும் நிலை என்பது, குழந்தையின் உடலை தாயில் உடலிலிருந்து கொஞ்சம் தள்ளி வைத்து பால் கொடுப்பது ஆகும்.

குழந்தையை கையில் ஏந்தி பால் கொடுக்கும் நிலையோடு, குழந்தையில் தலையை உங்கள் கையால் குறுக்காக பிடித்து, பாலூட்டும் பக்கத்தின் முழங்கை மேல் படுக்க வைப்பது தொட்டில் நிலை ஆகும்.

பக்கவாட்டில் வைத்து பால் கொடுக்கும் நிலை என்பது, தாயும் குழந்தையும் படுத்துக் கொண்டு பாலூட்டும் நிலை ஆகும். ஆனால், இது குழந்தை பால் குடிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். இதனால் குழந்தைக்கு கழுத்து வலி கூட ஏற்படலாம்.

படுத்து கொண்டு பால் குடிப்பதால் குழந்தைக்கு மூச்சுக்குழலில் பால் செல்ல வாய்ப்புள்ளது. ஆகையால் இந்த நிலையை அதிகம் பயன்படுத்த வேண்டாம். மேலும் எப்போது உட்கார்ந்த நிலையில் பால் கொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.