சருமம் ஈரப்பதமா இருக்க உதவும் எளிய வழிகள் இங்கே

By Gowthami Subramani
04 Jun 2024, 09:00 IST

கோடை வறட்சி

கோடைக்காலத்தில் வெப்ப அலையால் ஏற்படும் உடல் மற்றும் சருமத்தை சரியான முறையில் கவனிக்க வேண்டும். இதில் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும் சில இயற்கையான வழிகளைக் காணலாம்

தேன்

சருமத்தில் தேனை அப்ளை செய்வது ஒரு இயற்கையான ஈரப்பதமூட்டியாக செயல்படுவதுடன், சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது

கற்றாழை

இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது. இது சருமத்தில் ஒரு இனிமையான மற்றும் ஈரப்பதமூட்டும் விளைவைத் தருகிறது. இது கோடைக்காலத்திற்கு ஏற்றதாக அமைகிறது

தயிர்

தயிரில் நிறைந்துள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. இது சருமத்தில் தோன்றும் கறைகள், நுண்ணிய கோடுகள் மற்றும் சுருக்கங்களைத் தடுக்கிறது

தேங்காய் எண்ணெய்

சருமத்தில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது மெழுகு போன்ற பொருளாக செயல்பட்டு செல்களுக்கு சரியான ஊட்டச்சத்தை அளிக்கிறது. இதன் மூலம், சருமத்தை ஈரப்பதமாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவுகிறது

சன்ஸ்கிரீன் பயன்பாடு

கோடையில் சன்ஸ்கிரீன் பயன்பாடு சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது. இது சரும செல்களை பாதுகாப்பதுடன், புற ஊதா கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது

அதிக தண்ணீர் உட்கொள்ளல்

கோடையில் உங்கள் சருமம் வறண்டு போவதைத் தடுக்க, உடலை நீரேற்றம் அடையச் செய்ய வேண்டும். ஏனெனில் தண்ணீர் உட்கொள்வது சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்கி கறைகள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்குகிறது

முகத்தில் சூடான நீரை தவிர்ப்பது

எப்போதும் சருமத்திற்கு புதிய குளிர்ந்த நீரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில், சூடான நீர் சருமத் தடையை நீக்கி, எண்ணெய் மற்றும் வறட்சியை உள்ளே நுழைய அனுமதிக்கிறது. எனவே குளிர்ந்த நீரைப் பயன்படுத்துவது குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் வைக்க உதவுகிறது

நீராவி எடுப்பது

நாள்தோறும் நீராவி எடுப்பது, சருமத்தின் துளைகளைத் துறந்து, சருமத்தை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைக்க உதவுகிறது