உதடு செவசெவனு மாற தேங்காய் எண்ணெய் மட்டுமே போதும்!

By Karthick M
29 Oct 2024, 23:37 IST

சரும பராமரிப்பில் சிலர் உதடுகளைப் பராமரிப்பதை மறந்து விடுகின்றனர். உதடு சிவப்பாக இருந்தால் ஒட்டுமொத்த அழகும் சிறப்பாக இருக்கும்.

உதடுகளை சிவப்பாக மாற்ற தேங்காய் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உதடு வெடிப்பு, உலர்ந்த உதடு போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

உதடுகளுக்கு தேங்காய் எண்ணெயை ஓரிரவு முழுவதும் வைப்பது உதடுகளை ஈரப்பதமாக்குவதற்கும், நீரேற்றமாக வைப்பதற்கும் உதவுகிறது.

சருமத்தின் மூன்று தோல் அடுக்குகளையும் ஊடுருவிச் செல்லும் பண்புகளை தேங்காய் எண்ணெய் கொண்டுள்ளது. எனவே உதடுகளுக்கு தேங்காய் எண்ணெய் மிகுந்த பயன்களைத் தருகிறது.

மென்மையான சருமத்தை ஈரப்பதமாக்க உதடுகளுக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதில் உள்ள அமைதியான மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளே காரணமாகும்.

உதடுகளில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த ஆள்காட்டி விரலைப் பயன்படுத்த வேண்டும். இதை தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை செய்வதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம்.