மழைக்காலத்தில் ஏற்படும் நோயிடம் இருந்து தப்பிக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
தமிழகத்தில் ஆங்காங்கே பருவமழை பெய்து வருகிறது. இதனால் மழைக்கால நோய்களும் ஏற்படுகிறது. இதில் இருந்து தப்பிக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மழைக்கால நோய்கள் என்னென்ன, அவற்றில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று இங்கே காண்போம்.
காலரா
காலரா ஒரு பொதுவான நீர் மூலம் பரவும் நோய். இது வயிற்றுப்போக்கு, நீரிழப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். இதை தவிர்க்க சுத்தமான தண்ணீர் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
ஹெபடைடிஸ் ஏ
அசுத்தமான தண்ணீரால் ஏற்படும் ஹெபடைடிஸ் கல்லீரல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். இது மஞ்சள் காமாலை, காய்ச்சல், குமட்டல் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.
டைபாய்டு
அசுத்தமான நீர் அல்லது உணவு டைபாய்டு ஏற்படலாம். டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்களும் இந்த பருவத்தில் பொதுவானவை.
தொற்றிலிருந்து தப்பிக்கும் வழி
மழைக்கால நோயிடம் இருந்து தப்பிக்க நம்மை சுற்றியுள்ள இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதனை தவிர மேலும் சில வழிகள் உள்ளன. அவை இங்கே..
கைகளை சுத்தம் செய்யவும்
உங்கள் கைகளை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். சாப்பிடுவதற்கு முன்பும், வெளியில் இருந்து வீட்டிற்கு வந்த பின்பும், கழிவறையைப் பயன்படுத்திய பின்பும் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
பழம் மற்றும் காய்கறிகளை கழுவவும்
பலர் சாலையோர வியாபாரிகளிடமிருந்து காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்குகிறார்கள். எனவே, அவை மழைநீரில் ஈரமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன்பு அவற்றை நன்கு கழுவுவது முக்கியம்.
சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்கவும்
வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருங்கள். கொசுக்கள் பல நாட்கள் தேங்கி நிற்கும் நீரில் வளரும், எனவே உங்கள் வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய முயற்சிக்கவும்.
ஆடைகளில் கவனம்
பூச்சிகள் மற்றும் கொசுக்கள் கடிக்காமல் இருக்க உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணியுங்கள். மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலை தவிர்க்க கொசு விரட்டிகளை பயன்படுத்துங்கள். நீங்கள் மழையில் வெளியே சென்றிருந்தால், வீட்டிற்கு வந்தவுடன் உங்கள் கைகளையும் கால்களையும் கழுவுங்கள்.