வெறுங்காலில் நடப்பதால் இத்தனை ஆபத்தா?

By Gowthami Subramani
09 Nov 2024, 09:40 IST

புல் மீது நடப்பது

அதிகாலை நேரத்தில் புல்வெளியில் வெறுங்காலுடன் நடப்பது மிகவும் பயனுள்ளதாகும். இதனால், உடலில் ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் அதிகரிக்கிறது

தீமைகள்

புல்லில் வெறுங்காலுடன் நடப்பது நன்மையாக இருப்பினும் பலர் பாதணிகள் இல்லாமல் நடக்கும் பழக்கம் உள்ளது. அதே சமயம், அவ்வாறு நடப்பது உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இதில் வெறுங்காலுடன் நடப்பதன் விளைவுகளைக் காணலாம்

தொற்று பரவுதல்

சில சமயங்களில் வெறுங்காலுடன் நடப்பது, கால்களின் தோல் அல்லது நகங்களில் தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது

உடல் வலி

வெறுங்காலுடன் நடப்பது உடலின் மற்ற பகுதிகளிலும் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இது முழங்கால் அல்லது முதுகுவலியை ஏற்படுத்துகிறது

காலில் உணர்வின்மை

குளிர்ந்த காலநிலையில் வெறுங்காலுடன் நடக்கும் போது, பாதங்களில் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது பாதங்களில் சிறிது நேரம் உணர்வின்மையை ஏற்படுத்தலாம்

நீரிழிவு நோயாளிகள்

சர்க்கரை நோயாளிகள் வெறுங்காலுடன் நடப்பதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில், இது அவர்களின் நரம்புகளில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. மேலும் இது குணப்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம்

குதிகால் விரிசல்

வெறுங்காலுடன் நடப்பது குதிகால் வெடிப்பு அல்லது கொப்புளங்களை ஏற்படுத்துகிறது. இது கடுமையான பிரச்சனையாக மாறலாம்

காயம் ஏற்படுவது

வெறுங்காலுடன் நடப்பது கண்ணாடி, முட்கள் அல்லது பிற கூர்மையான பொருட்களால் பாதிக்கப்பட்டு காயங்களை ஏற்படுத்துகிறது

குறிப்பு

வெறுங்காலுடன் நடந்தால், ஆண்டிபயாடிக் கரைசல்கள் கொண்ட வெதுவெதுப்பான நீரில் கால்களை சுத்தம் செய்ய வேண்டும். மேலும், தூங்கும் முன் கால்களுக்கு கிரீம் தடவலாம்