இரவில் நல்ல தூக்கம் பெற மாலை நேரத்தில் இந்த தவறுகளை செய்யாதீங்க

By Gowthami Subramani
07 Apr 2025, 19:14 IST

நீண்ட சோர்வான நாளுக்குப் பிறகு பலரும் தூங்கப் போராடுகின்றனர். சில நேரங்களில் இது தூக்கமின்மையாக இல்லாமல் நாம் செய்யும் சில பழக்க வழக்கங்களும் காரணமாகிறது. இதில் படுக்கைக்கு முன் நாம் தவிர்க்க வேண்டிய சில பழக்கங்களைக் காணலாம்

செல்போன் பார்ப்பது

இரவு தூங்கும் முன்பாக செல்போன், மடிக்கணினிகள், தொலைக்காட்சிகள் போன்றவற்றின் திரைகளிலிருந்து வரும் நீல ஒளி, உடலின் மெலடோனின் உற்பத்தியைப் பாதிக்கிறது. எனவே படுக்கைக்குக் குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்பாக திரையை அணைக்க வேண்டும்

அதிக இரவு உணவு சாப்பிடுவது

காரமான உணவுகள் அல்லது இரவு நேர விருந்துகள் போன்றவை அஜீரணம், நெஞ்செரிச்சல் மற்றும் மோசமான தூக்கத்திற்கு வழிவகுக்கலாம். எனவே, இரவு உணவை லேசாக வைத்து, தூங்குவதற்குக் குறைந்தது 2-3 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட வேண்டும்

அதிகமாக யோசிப்பது

கவலைகள் நிறைந்த பரபரப்பான யோசனையுடன், படுக்கைக்குச் செல்வது பதட்டத்தைத் தூண்டி தடுமாறச் செய்யலாம். படுக்கைக்குச் செல்லும் முன் ஆழ்ந்த சுவாசம் மனக் குழப்பத்தை நீக்க உதவுகிறது

பகலில் தாமதமாக காஃபின் குடிப்பது

காபி, தேநீர், எனர்ஜி பானங்கள் அல்லது சாக்லேட் போன்றவை நரம்பு மண்டலத்தைத் தூண்டி, விரும்புவதை விட அதிக நேரம் விழித்திருக்க வைக்கிறது. மாலை நேரத்தில் மூலிகை தேநீர் அல்லது சூடான பாலுக்கு மாற வேண்டும்

ஒழுங்கற்ற தூக்க அட்டவணை

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரங்களில் தூங்குவதும், எழுந்திருப்பதும் உடல் கடிகாரத்தைக் குழப்பலாம். வார இறுதி நாட்களில் கூட உடலை இயற்கையாகவே தூங்கப் பயிற்றுவிக்க ஒரு நிலையான தூக்க வழக்கத்தை பராமரிக்க முயற்சிக்க வேண்டும்