வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் அபாயங்கள் இங்கே...

By Ishvarya Gurumurthy G
01 May 2024, 08:30 IST

நேரமின்மை அல்லது பசியின் காரணமாக பலர் உணவை வேகமாக உண்கின்றனர். இப்படி செய்வதான் என்ன ஆகும் என்று இங்கே காண்போம்.

இப்போதெல்லாம் பலர் வேலைக்காக காலை முதல் இரவு வரை ஓடுகிறார்கள். இதனால், சாப்பிடும் போது கூட அமைதியாக அமர்ந்து சாப்பிடுவதில்லை. நேரமில்லாததால் வேகமாக சாப்பிடுகிறார்கள். இதில் எவ்வளவு சிக்கல் உள்ளது தெரியுமா? இதன் விவரத்தை அறிய பதிவை ஸ்வைப் செய்யவும்.

எடை அதிகரிக்கும்

வேகமாக சாப்பிடுவதால், நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை மூளை உணராது. இதனால் அதிகம் சாப்பிடுவார்கள். நம் உடலுக்குத் தேவையானதை விட அதிக உணவை உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும்.

செரிமான பிரச்னைகள்

நாம் உண்ணும் உணவை நன்றாக மென்று சாப்பிடுவது, உணவு விரைவில் ஜீரணமாகும். இருப்பினும், வேகமாக சாப்பிடுபவர்கள் உணவை மெல்லாமல் விழுங்குவார்கள். இதனால் செரிமான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சர்க்கரை அளவு அதிகரிக்கும்

வேகமாக சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கார்போஹைட்ரேட் அல்லது சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை உண்ணும் போது சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

இதய நோய் அபாயம்

உண்வை வேகமாக சாப்பிடுவதால் இதயம் சார்ந்த நோய்கள் வரலாம். வேகமாக சாப்பிடுபவர்களுக்கு மெட்டபாலிக் சிண்ட்ரோம் ஏற்படும். இதனால் அவர்களுக்கு இதய நோய், பக்கவாதம், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

டிவி, போன் பார்த்துக்கொண்டே சாப்பிட வேண்டாம். இவ்வாறு செய்வதன் மூலம் உணவை சரியாக மென்று சாப்பிடாமல் வேகமாக சாப்பிடுவீர்கள்.

நீங்கள் சாப்பிடும்போது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சாப்பிடவும் திட்டமிடுங்கள். அவர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே சாப்பிட்டால், மெதுவாகச் சாப்பிடலாம்.

சாப்பிடும் போது எதையாவது நினைத்துக்கொண்டு சாப்பிட வேண்டாம். உணவின் சுவையை அனுபவித்து மெதுவாக சாப்பிடுங்கள்.

நீங்கள் மிகவும் பசியாக இருக்கும் வரை காத்திருக்க வேண்டாம். பசியின்மை அதிகமாக இருந்தால், அதிகமாக சாப்பிட வாய்ப்பு உள்ளது. எனவே, கொஞ்சம் பசியாக இருக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள்.