வெந்நீரில் தேன் மற்றும் எலுமிச்சை கலந்து குடிப்பதன் நன்மைகள்!

By Devaki Jeganathan
17 Sep 2024, 11:34 IST

நம்மில் பலர் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீரில் தேன் மற்றும் எலுமிச்சை கலந்து குடிப்போம். ஆரோக்கியத்துக்கும் இது ஒரு வரப்பிரசாதம். இதன் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

எலுமிச்சை மற்றும் தேன் பண்புகள்

எலுமிச்சை மற்றும் தேனில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை.

செரிமானத்தை மேம்படுத்தும்

தினமும் வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை தண்ணீர் கலந்து குடிப்பதால் செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் செரிமானம் தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி

உடலில் நோய்களை எதிர்த்துப் போராட, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். இதற்கு வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை கலந்து குடிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் நோய்களில் இருந்து விலகி இருக்கும்.

எடை இழக்க

எலுமிச்சை மற்றும் தேன் உடல் எடையை குறைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வெதுவெதுப்பான நீரிலும் இதனை உட்கொள்ளலாம். இவ்வாறு செய்வது உடல் எடையை குறைக்க உதவும்.

உடலை டீடாக்ஸ் செய்யும்

உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற, எலுமிச்சை மற்றும் தேனை வெதுவெதுப்பான நீரில் கலக்க வேண்டும். இது உடலுக்கு மிகவும் நல்ல டிடாக்ஸ் பானம்.

சரும ஆரோக்கியம்

இந்த பானத்தை அருந்துவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். கூடுதலாக, இது சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதன் மூலம் புள்ளிகள், முகப்பரு போன்ற பிரச்சனைகளை நீக்கலாம்.

எப்படி குடிக்கணும்?

தேன் மற்றும் எலுமிச்சை கலந்த வெதுவெதுப்பான நீரில் குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும். இதை தினமும் காலையில் குடிக்கலாம். இது உடலை நச்சுத்தன்மையாக்கி, செரிமானத்தை மேம்படுத்துகிறது.