வாழை இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பது இவ்வளவு நல்லதா?

By Devaki Jeganathan
14 Feb 2024, 18:56 IST

வாழைப்பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழம். வாழைப்பழம் மட்டுமல்ல, அதன் இலை, தண்டு, பூ என அனைத்தும் ஆரோக்கியம் நிறைந்தது. வாழை இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பது எவ்வளவு நல்லது என இங்கே பார்க்கலாம்.

சத்துக்கள் நிறைந்தது

வாழையிலையில் உள்ள மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதன் இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

உடல் நச்சு நீங்கும்

வாழை இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். ஏனெனில், அதில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

வயிறு ஆரோக்கியம்

வாழை இலை நீர் செரிமானத்தை பராமரிக்க உதவும். இதனை, தினமும் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி

வாழை இலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதன் மூலம் வைரஸ் தொற்றுகளைத் தடுக்கிறது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தலாம்.

தோலுக்கு நல்லது

வாழை இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதால் சருமத்தில் ஈரப்பதம் அதிகரிக்கும். இது தோல் ஒவ்வாமை மற்றும் சொறி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

தொண்டை வலி

வாழை இலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தொண்டை வலியை படிப்படியாக குறைக்கும். தினமும் கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பது மிகவும் நன்மை பயக்கும்.

குடல் புண்

வாழை இலை நீர் குடல் அழற்சி மற்றும் காயங்களை குணப்படுத்தும். இது குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்கிறது.

காய்ச்சல்

குளிர்காலத்தில் அடிக்கடி காய்ச்சல் மிக விரைவாக ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் வாழை இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் காய்ச்சலின் அசௌகரியம் தணியும்.