பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கலாமா?

By Gowthami Subramani
29 Apr 2024, 09:24 IST

பழங்களை உட்கொள்வது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். எனினும், இதை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எப்படி தெரியுமா?

ஆப்பிள்

ஆப்பிளை உட்கொண்ட பிறகு உடனேயே தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நேர்மறைக்கு பதிலாக எதிர்மறையான விளைவை ஏற்படுத்தலாம்

காரணம்

ஆப்பிள் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் அருந்துவது அஜீரணம், வாயு போன்ற வாயு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மேலும் இது இருமல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது

தர்பூசணி

தர்பூசணி உட்கொண்ட பின் உடனேயே தண்ணீர் அருந்த வேண்டாம் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

காரணம்

தர்பூசணியில் நல்ல அளவிலான தண்ணீர் நிறைந்துள்ளது. சாப்பிட்ட உடனே தண்ணீர் அருந்துவது செரிமான அமைப்பில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது

வாழைப்பழம்

இது கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைக் கொண்டுள்ளதால், இதை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்

காரணம்

வாழைப்பழத்திற்குப் பிறகு தண்ணீர் உட்கொள்வது இருமல் மற்றும் இரத்த சர்க்கரை அளவைப் பாதிக்கலாம்

முலாம்பழம்

முலாம்பழத்தை சாப்பிட்ட உடன் தண்ணீர் அருந்துவது அமிலத்தன்மை, வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்