தினமும் 2 புதினா இலையை மென்று சாப்பிடுவதன் நன்மைகள்!

By Devaki Jeganathan
04 Sep 2024, 14:54 IST

புதினா இலைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. தினமும் இரண்டு புதினா இலையை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

சிறந்த செரிமானம்

தினமும் ஒரு புதினா இலையை மென்று சாப்பிடுவது செரிமான நொதிகளை அதிகரிக்கிறது. இது செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவுகிறது. இதனால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.

வாய் துர்நாற்றம்

தினமும் 1 புதினா இலை சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். இது வாயில் பாக்டீரியா பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

நச்சுகளை அகற்றும்

புதினா இலையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

சரும பொலிவு

இந்த இலையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும், இதன் காரணமாக முகத்தில் பருக்கள் மற்றும் முகப்பருக்கள் இருக்காது. இதனால் முகம் கறையின்றி பொலிவாக இருக்கும்.

அசிடிட்டி

தினமும் ஒரு புதினா இலையை மென்று சாப்பிட்டு வந்தால் வயிற்றில் அமிலத்தன்மை பிரச்சனையோ, நெஞ்செரிச்சல் பிரச்சனையோ வராது.

மூச்சுத் திணறல்

தினமும் ஒரு புதினா இலை சாப்பிட்டு வந்தால் அலர்ஜி, ஆஸ்துமா வராது. இதனால் சுவாச பிரச்சனைகள் நீங்கும்.

ஃபேஸ் பேக்

புதினா இலைகளை அரைத்து முகத்தில் பூசவும் செய்யலாம். இது சருமத்தில் பருக்கள் மற்றும் முகப்பரு பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.