குறைந்த செலவில், குறைவான நேரத்தில் சமைக்கும் உணவுதான் சட்னி. இதை பெரும்பாலும் நாம் இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடுவோம். நொடியில் தயாராகும் கார சட்னி செய்முறை இதோ.
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 3 நறுக்கியது, பூண்டு - 2 பற்கள், தக்காளி - 2 நறுக்கியது, பியாத்கே மிளகாய் - 12, கல் உப்பு - 1 தேக்கரண்டி, புளி, எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
செய்முறை படி - 1
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.
செய்முறை படி - 2
பிறகு பியாத்கே மிளகாய், கல் உப்பு, புளி சேர்த்து வதக்கவும். பின்பு நன்கு ஆறவிட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
செய்முறை படி - 3
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து கலந்துவிடவும்.
செய்முறை படி - 4
பின்பு கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து அரைத்த சட்னியை சேர்த்து கலக்கவும். இதோ சுவையான கார சட்னி தயார்!
எப்படி பரிமாறுவது?
இதை இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்து உணவுக்கு அட்டகாசமாக இருக்கும்.