உடற்பயிற்சி செய்த பிறகு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

By Devaki Jeganathan
12 Mar 2024, 07:01 IST

உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். இது பல வகையான நோய்களைத் தடுக்கிறது மற்றும் மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. ஆனால், சில நேரங்களில் உடற்பயிற்சி செய்யும் போது நமக்கே தெரியாமல் சில தவறுகளை செய்வோம். இதனால், சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக உடற்பயிற்சி செய்த உடனேயே தண்ணீர் குடிப்பது. இது சரியா? என பார்க்கலாம்.

தண்ணீர் அவசியம்

உடற்பயிற்சிக்குப் பிறகு உடலுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. ஏனென்றால், உடற்பயிற்சிக்கு பின் உடலில் நீர்ச்சத்து குறைகிறது. இது உடல் விறைப்பு மற்றும் வலியை ஏற்படுத்தும்.

உடற்பயிற்சிக்கு பின் தண்ணீர்

உடற்பயிற்சிக்குப் பிறகு உடல் வியர்வையில் நனைகிறது. இந்நிலையில், தொண்டை வறண்டு, தண்ணீர் குடிப்பதை நிறுத்த முடியாமல் தவிக்கிறோம்.

எப்போது தண்ணீர் குடிக்கனும்?

உடற்பயிற்சி முடிந்த உடனேயே தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லதல்ல என்று நம்பப்படுகிறது. இதற்கு சுமார் 20 அல்லது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்த பின்னரே தண்ணீர் குடிக்க வேண்டும்.

என்ன பிரச்சினை ஏற்படும்?

உடற்பயிற்சி செய்த உடனேயே தண்ணீர் குடிப்பதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். இது நெஞ்சு வலி, வாந்தி, வயிற்று வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.

அதிக தண்ணீர் குடிக்க வேண்டாம்

உடற்பயிற்சிக்குப் பிறகு தண்ணீர் குடிக்கும் போதெல்லாம், ஒரே நேரத்தில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

இவற்றையும் குடிக்கலாம்

உடற்பயிற்சியின் போது நிறைய வியர்வை வெளியேறுகிறது. இதற்கு வெற்று நீருக்கு பதிலாக தேங்காய் தண்ணீர் அல்லது எலுமிச்சை நீரை உட்கொள்ளலாம்.

குளிர்ந்த நீர் வேண்டாம்

உடற்பயிற்சி செய்வதால் உடல் சூடாகும். இந்நிலையில், குளிர்ந்த நீர் குடிப்பது தீங்கு விளைவிக்கும். எனவே, நீங்கள் வெறும் அல்லது வெதுவெதுப்பான நீரைக் குடிக்கலாம்.