தலைக்கு எண்ணெய் தடவுவது முடி வளர்ச்சியை மேம்படுத்தலாம். எனினும், தலைக்கு எண்ணெய் வைக்கும் போது பின்பற்றப்படும் சில தவறான வழிமுறைகள் முடி உதிர்வுக்கு வழிவகுக்கலாம்
அதிக எண்ணெய் தடவுவது
உச்சந்தலை மற்றும் முடியில் ஒரே நேரத்தில் அதிக எண்ணெய் தடவுவது அதிக ஈரப்பதத்தைத் தரும். இது முடியைத் தளர்வாகவும், உடையக்கூடியதாகவும் மாற்றலாம். எனவே முடி மற்றும் உச்சந்தலைக்கு மிதமான அளவு எண்ணெயைப் பயன்படுத்தலாம்
மிகவும் கடினமாக தேய்த்தல்
முடியை மிகவும் கடினமாக மசாஜ் செய்வது முடியை சேதப்படுத்துவதுடன், முடி உதிர்தலுக்கு வழிவகுக்கலாம். மேலும் இது பொடுகு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உச்சந்தலையை விரல் நுனியைப் பயன்படுத்தி மென்மையான வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யலாம்
தவறான எண்ணெய் பயன்பாடு
வெவ்வேறு முடி வகைகளுக்கு வெவ்வேறு எண்ணெய்கள் தேவைப்படும். இதில் தவறான வகை எண்ணெயைப் பயன்படுத்துவது ஒவ்வாமை எதிர்வினைகள், முடி உதிர்தல் அல்லது உச்சந்தலையில் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்
அடிக்கடி எண்ணெய் தடவுதல்
அதிகப்படியான எண்ணெயைத் தவிர, அடிக்கடி எண்ணெய் தடவுவதும் முடி மற்றும் உச்சந்தலையில் முடி உடைவதற்கு வழிவகுக்கும். மேலும் இது முடி உதிர்தலை ஏற்படுத்தலாம். எனவே வாரத்திற்கு 1-2 முறைக்கு மேல் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவதை தவிர்க்க வேண்டும்
சூடான எண்ணெயைத் தவிர்ப்பது
குளிர்ந்த எண்ணெயை விட சூடான எண்ணெய் உச்சந்தலையில் மிகவும் திறம்பட ஊடுருவும். எனினும் இது போதுமான ஊட்டச்சத்தை அளிக்காது. எண்ணெயை பயன்படுத்தும் முன் சிறிது சூடாக்கினாலும், அதிகம் சூடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும்
முடியை இறுக்கமாக்குதல்
தலைமுடியை இறுக்கமாகக் கட்டுவது அதிலும் குறிப்பாக, எண்ணெய் தடவிய பிறகு முடியை இறுக்கமாகக் கட்டுவது மயிர்க்கால்களில் அழுத்தத்தை ஏற்படுத்தி முடி உடைதலுக்கு வழிவகுக்கும். இதைத் தவிர்க்க மென்மையான, தளர்வான துணியைப் பயன்படுத்தலாம்
எண்ணெய் தடவிய பிறகு சீவுதல்
ஈரமான அல்லது எண்ணெய் தடவிய முடியை சீப்புவது, ஈரமான முடியை மிகவும் உடைக்கக் கூடியதாக மாற்றலாம். இதில் முடி சேதமடைய வாய்ப்புள்ளது. இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். எனவே முடி வறண்டு அல்லது பகுதியளவு காய்ந்த பிறகு அகலமான பல் கொண்ட சீப்பு பயன்படுத்தலாம்