தினமும் 5 நிமிடம் சுவரில் கால்களை உயர்த்துவதன் நன்மைகள்

By Gowthami Subramani
29 Aug 2024, 09:25 IST

தினமும் சுவரில் கால்களை உயர்த்தி வைத்திருப்பது உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைத் தருகிறது. இதில் தினமும் சுவரில் கால்களை உயர்த்துவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

செரிமான ஆரோக்கியத்திற்கு

தலைகீழ் நிலை செரிமான உறுப்புகளைத் தூண்டுவதுடன், வயிற்றுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இவை செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல்லை நீக்குவதுடன், ஆரோக்கியமான செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது

கீழ் முதுகு வலி நீங்க

இந்நிலையில் இருப்பது கீழ் முதுகு தசைகளை நீட்டவும் ஓய்வெடுக்கவும் உதவுகிறது. இவ்வாறு கால்களை உயர்த்துவதன் மூலம், முதுகுத்தண்டில் அழுத்தம் குறைக்கப்பட்டு, முதுகில் நிவாரண உணர்வை ஊக்குவிக்கிறது

சுழற்சி மேம்பாட்டிற்கு

கால்களை உயர்த்துவது இதயத்திற்கு மீண்டும் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இவை வீக்கத்தைக் குறைத்து ஒட்டுமொத்த சுழற்சியை மேம்படுத்த உதவுகிறது. குறிப்பாக நீண்ட நேரம் உட்கார்ந்து அல்லது நிற்கும் நபர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது

கால் வீக்கம் குறைய

கால்களை உயர்த்தும் போது மேல் உடலுக்கு திரவம் திரும்ப செல்கிறது. இவை கால்களில் வீக்கத்தைக் குறைக்கிறது. குறிப்பாக, கால் வீங்கி நரம்பு வலியை அனுபவிப்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்

சிறந்த தூக்கத்திற்கு

படுக்கைக்கு முன் இந்த ஆசனத்தை பயிற்சி செய்வது செய்வது நரம்பு மண்டலத்தை தளர்த்தவும், அமைதியான தூக்கத்திற்கும் உடலைத் தயார் செய்கிறது. இந்த அமைதியான விளைவு சிறந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்

குறைந்த மன அழுத்தம்

இந்த நிலையில் இருப்பது பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்துகிறது. இது மனம் மற்றும் உடலை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் தளர்வை ஊக்குவிப்பதன் மூலம் பதட்டத்தை நிர்வகித்து ஒட்டுமொத்த மன நலனை மேம்படுத்த உதவுகிறது

எப்படி செய்வது

உடலின் ஒரு பக்கத்தை சுவருக்கு எதிராக தரையில் உட்கார்ந்து, மெதுவாக முதுகில் படுத்து கால்களை மேலே உயர்த்தி சுவருக்கு எதிராக வைக்க வேண்டும். பின் கைகளை பக்கவாட்டில் தளர்த்தி வைக்கவும் அல்லது வசதியான நிலையில் வைத்துக் கொள்ளலாம்