ஊறவைத்த உலர் திராட்சையை 1 வாரம் சாப்பிட்டுவதால் கிடைக்கும் நன்மைகள்!

By Devaki Jeganathan
01 Mar 2024, 13:46 IST

உலர் திராட்சையை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ஈர திராட்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இதன் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

சத்துக்கள் நிறைந்தது

ஊறவைத்த திராட்சையில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, தாமிரம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.

நோய் எதிர்ப்பு சக்தி

ஊறவைத்த உலர் திராட்சையை 1 வாரம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். இதில், உள்ள பீனாலிக் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கண்களுக்கு நல்லது

ஈரமான திராட்சை கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். திராட்சையில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது, இது கண்களை ஆரோக்கியமாக வைக்கிறது.

தோலுக்கு நல்லது

உலர் திராட்சையில் உள்ள ஃபீனால் எனும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமம் தொடர்பான பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, தினமும் திராட்சையை உட்கொள்வதால் சுருக்கங்கள் நீங்கும்.

ஆரோக்கியமான முடி

ஊறவைத்த திராட்சையை 1 வாரம் சாப்பிட்டு வர முடி வலுவடையும். திராட்சையில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் முடி உதிர்வதைத் தடுக்க உதவுகிறது.

எடையை குறைக்கிறது

திராட்சை எடையை குறைக்கிறது. இதில், உள்ள நார்ச்சத்துகள் உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது.